Sunday, March 26, 2023

*பிறர் விட்ட சாபத்திலிருந்து தப்பிப்பது எப்படி*?



யாரோ விட்ட சாபம்

தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா? 


மறைமுகமாக யாரோ விட்ட சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்!


ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும். 


அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம். 


எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது. 


ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


சேதாரம் இல்லாத 8(ஓட்டை,பூச்சி அரிக்காத) முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை 

தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் வீட்டில் கட்டாயம், உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும். 


அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாவிலை பக்கத்தில், இன்னொரு மாவிலையை வைத்து காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறும் நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்கும்படி வரிசையாக அடுக்கி வைத்து கொள்ளவும்.


அந்த மாவிலைகளின் மேல், தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை, ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும். 


இப்படி, தேங்காய் சர்க்கரை கலவையை, நைவேத்தியமாக மாவிலைகளின் மீது வைத்தெ குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த பரிகாரத்தை யார் வேண்டும் என்றாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம்.


உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இலலை.


தேய்பிறை அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 


தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும், அது கட்டாயம் நிவர்த்தி அடையும்.


முழுமையாக நிவர்த்தி அடையவில்லை என்றாலும், அந்த சாபத்தின் தாக்கமானது கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதே போல் கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும், விலக வேண்டும் என்றால் சிறிதளவு அருகம்புல்லை எடுத்து வந்து, உங்கள் தலையில் வைத்து, தலைக்கு தண்ணீர் ஊற்றி  குளிக்க வேண்டும். 


அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆவாரம்பூ பொடியை வீட்டில் வாங்கி வைத்து, ஒரு ஸ்பூன் அளவு, எடுத்து தலையில் தேய்த்து, தலைக்கு குளிக்க வேண்டும்.


மாதம் ஒருமுறை இந்த இரண்டு குளியல் முறைகளில் ஏதாவது ஒரு குளியலை செய்தாலே போதும்.


கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும் கட்டாயம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பௌர்ணமி தினத்தில் இப்படி குளித்தால், உங்களுக்கு இருக்கும் தோஷமும் சாபமும் முழுமையாக நீங்கும் என்பது உறுதி.


தொடர்ந்து 11 மாத பௌர்ணமி தினங்களில், இப்படி குளித்து வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு, யார் எப்படிப்பட்ட கெடுதல் செய்தாலும், உங்கள் மனதார யாரையும் சபித்து விடாதீர்கள்! 


சில நேரங்களில் எதிர்பாராமல், நம் 

வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளானது, அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 


அடுத்தவர்களுடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கு எக்காரணத்தைக் கொண்டும், நாம் விட்ட சாபம் காரணமாக இருக்கக் கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 


எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும்


No comments: